tamilnadu

img

நாட்டின் சிறந்த 5 அரசு பள்ளிகள் அறிவிப்பு - ஒடிஷா பள்ளி முதலிடம் 

இ.டபிள்யு.ஐ.எஸ்.ஆர் நாட்டின் சிறந்த பள்ளிகளுக்கான சர்வேயில் இந்திய அளவில் ஒடிஷாவில் உள்ள அரசு பள்ளி முதலிடம் பிடித்துள்ளது.

ஒடிஷாவின் கஞ்சம் மாவட்டத்தில் ஹதியோடா, பலாங்கீர் மாவட்டத்தில் பத்ரசேபா ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் ஒடிஷா ஆதர்ஷ வித்யாலயா பலியானது நாட்டின் தலை சிறந்த அரசு பள்ளிகளுக்கான ஆல் இந்தியா ஸ்கூல் ரேங்கிங் 2020ல் முதலிடம் பிடித்துள்ளது.

அரசு பள்ளிகளின் தரத்தில் கஞ்சம் மாவட்டத்தின் ஹதியோடா ஓவிஏ பள்ளியும், அரசு உறைவிடப் பள்ளிகளுக்கான தரத்தில் பலாங்கீர் மாவட்டத்தின் பத்ரசேபா பள்ளியும் அகில இந்திய அளவில் 5 ஆவது இடத்தை பிடித்துள்ளது .

ஒடிஷா மாநிலத்தில் ஒவ்வொரு வட்டார அளவிலும் ஆங்கிலம் வழியிலான சிபிஎஸ்சி பள்ளிகள் நடத்த வேண்டும் என ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் கூறியிருந்தார். இதனடிப்படையிலேயே அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு வந்தது.

எஜூகேஷன் ஓல்ட் என்ற இதழின் சார்பாக இ.டபிள்யு.ஐ.எஸ்.ஆர் சர்வே நடத்தப்பட்டது. இதில், பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் உள்ளிட்ட மொத்தம் 11 ஆயிரத்து 368 பேரிடம் கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டது. இந்த சர்வே நாட்டின் 28  பெரிய நகரங்களில் உள்ள பள்ளிகளில் நடத்தப்பட்டது.

14 கேள்விகளின் அடிப்படையில் நாட்டின் 2,000 பிரைமரி மற்றும் செகண்டரி பள்ளிகள் குறித்த ஆய்வில், கல்வி திறன், உட்கட்டமைப்பு வசதி, மாணவர்களின் தனிநபர் திறன், தலைமைத்துவ பண்பு, பாடத்திட்ட முறை, பாதுகாப்பு, சுகாதாரம், சமூக சேவை, சர்வதேச தரம், பெற்றோர் ஈடுபாடு, ஆசிரியர் நலனும் மேம்பாடும், கட்டணம், விளையாட்டு கல்வி,  உள்ளிட்டவைகளின் அடிப்படையில் இந்த கேள்விகள் கேட்கப்பட்டன.