ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகநாதர் கோயிலில் 400 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் கோயிலை திறக்க முடியாது என அம்மாநில அரசுதெரிவித்துள்ளது.
ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் ஆலயத்தில் பணியாற்றும் 400 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தற்போது கோயிலை திறக்க முடியாது என மாநில அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பூரி ஜெகநாதர் கோயிலை திறக்க வலியுறுத்தி அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்துள்ள ஒடிசா அரசு, பூரியில் உள்ள ஜெகநாதர் கோயிலின் கருவறையில் போதுமான இடம் இல்லை என்று தெரிவித்துள்ளது.
எனவே கோயில் திறக்க அனுமதிக்கப்பட்டால் தொற்று அதிகம் பரவ வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் கோயில் ஊழியர்கள் 351 பேருக்கும், 51 அதிகாரிகளுக்கும் பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.