டி.ஆர்.இ.யு செயல் தலைவர் ஏ.ஜானகிராமன் பேச்சு
சென்னை, நவ. 23- ரயில்வே தனியார்மய த்திற்கு எதிராக தொழிற்சங்கங்க ளின் கூட்டமைப்பு சார்பில் “ரயில்வேயை பாதுகாப்போம், தேசத்தை பாதுகாப்போம்” என்ற தலைப்பில் சென்னை பெரம்பூரில் வெள்ளிக்கிழமை (நவ.22) கருத்தரங்கம் நடை பெற்றது. கருத்தரங்கிற்குத் தலைமை தாங்கி டி.ஆர்.இ.யூ. செயல் தலைவர் ஏ.ஜானகிராமன் பேசியதாவது:- மத்திய அரசுப் பணியில் 35 ஆண்டை கடந்திருந்தாலோ அல்லது 55 வயதை கடந்திரு ந்தாலோ பணி ஓய்வு என அறி விக்கப்பட்டது. அப்படி எதுவும் இல்லை என அரசு மறுத்திருக்கி றது. ஆனால் பாலக்காடு கோட்ட த்தில் எஸ்.எம்.உன்னி கிருஷ்ணன் என்பவருக்கு 55 வயதைக் காரணம் காட்டி பணி ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பாஜக அரசு எதை இல்லை இல்லை என மறுக்கிறதோ அதை விரைந்து அமல்படுத்துகிறது.
வாரணாசி பணிமனைக்குச் சென்று பிரதமர் மோடி ரயில்வே தனியார்மயம் இல்லை என்று பேசினார். ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயலும் ரயில்வே தனியார்மயம் இல்லை எனக் கூறினார். பிறகு, ரயில்வேயில் சில தனியார்களை அனுமதிக்கி றோம் என விளக்கம் அளிக்கி றார்கள். 2 ரயிகள் மட்டும்தான் தனியாருக்கு வழங்கப்படும் என்று கூறினார்கள். ஆனால் 150 ரயில்களையும், 50 ரயில் நிலையங்களையும் தனியாரி டம் வழங்குவதற்கான திட்டம் தீட்டப்பட்டு பணிகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதை ரயில்வே அமைச்சகம் மேற்கொள்ளவில்லை. மாறாக மோடி தலைமை தாங்கக் கூடிய நிதி அயோக் மேற்கொள்கிறது. தனியார்மயமாக்கல் குறித்து ரயில்வே அமைச்சகத்திற்கோ, ரயில்வே வாரியத்திற்கோ அதிகாரமில்லை, அது பிரதமர் மோடியின் அதிகாரம் எனக் கூறுகிறார்கள். நேரடியாகப் பிரதமர் தலையீட்டில் ரயில்வே தனியார்மய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முதலில் ஒரு பணிமனையை மட்டும்தான் தனியாரிடம் வழங்குகிறோம் எனக் கூறி னார்கள். இப்போது 44 பணி மனைகளையும், ஐ.சி.எப் உள்ளிட்ட 7 உற்பத்தி தொழிற் சாலைகளையும் தனியாருக்கு வழங்கும் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. முதலில் ஒரு கார்ப்ப ரேஷன் என்றார்கள். இப்போது கோச்சுக்குத் தனி கார்ப்பரேஷன், இஞ்ஜினுக்கு தனி கார்ப்பரேஷன் என 2 கார்ப்பரேஷன்கள் உருவாக்க ப்படும் எனக் கூறுகிறார்கள். உலக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளதால், கார்ப்பரேஷனாக மாற்றப்பட்ட பிறகு ஐசிஎப் உலக ஒப்பந்தங்களில் (டெண்டர்) கலந்து கொள்ள வேண்டும். இந்தியன் ரயில்வேக்கு ஐசிஎப் கோச் வழங்க வேண்டும் என்றால் உலக ஒப்பந்தத்தில் போட்டி போட்டுத்தான் வழங்க முடியும்.
பி.எஸ்.என்.எல். நிறுவன த்தின் நிலை ரயில்வேக்கும் ஏற்படும். ரயில்வே நிறுவன மாக மாற்றப்பட்டால் பணிக்கு உத்தரவாதம் கிடையாது. பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் விருப்ப ஓய்வு திட்டம் அறிவித்தது போல் ரயில்வேயில் அறிவிக்கமாட்டார்கள். மாறாக நெருக்கடி மூலம் பணியிலிருந்து தொழிலாளர்களே வெளி யேறும் நிலை உருவாக்கப்ப டும். மிகப்பெரிய அபாயத்தில் ரயில்வே துறையும், தொழி லாளர்களும் உள்ளனர். பாஜக அரசின் இந்த நட வடிக்கைகளுக்கு எதிராக வட மாநிலங்களில் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. டி.என். பணிமனையில் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருக்கும் போது, தொழிலாளர்கள் பணிமனை வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். பஞ்சாயத்து, கிராம தலைவர்கள், அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்பு கள் என அனைத்து தரப்பினரை யும் திரட்டி தொடர்ச்சியான போராட்டங்களைப் போராட்டக் குழு முன்னெடுக்கிறது.
வாரணாசியில் இரவு 8 மணிக்கு குடும்பத்துடன் தொழி லாளர்கள் டார்ச்லைட் பேரணி நடத்துகிறார்கள். வரும் 30ஆம் தேதி சித்தரஞ்சன் பொது மேலாளர் அலுவலகத்திலிருந்து கொல்கத்தா ஆளுநர் மாளிகை நோக்கி தொழிலாளர்கள் நெடும்பயணம் மேற்கொள்ள உள்ளார்கள். வடக்கில் நடை பெறும் போராட்டத் தீ தெற்கி லும் பற்றி எரிய வேண்டும். மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராக, தனியார்மய நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொழிலாளர்களையும், பயணி களையும், பொதுமக்களையும் அணிதிரட்ட வேண்டும். சாதி, மதங்களைக் கடந்து அனை வரும் தொழிலாளர்கள் ரயில்வே தொழிலாளர்கள், பொதுமக்கள் வரிப்பணத்தில் உருவானது, இதைத் தனியாருக்குத் தாரைவார்க்க அனுமதியோம் என்ற முழக்கத்தோடு போராட்டங்களை முன்னெடு ப்போம். இவ்வாறு அவர் பேசினார்.