சாத்தியார் அணை வறண்டது... மதுரை பாலமேடு அருகே உள்ளது சாத்தியார் அணை. இதன் மொத்தக் கொள்ளளவு 29 அடி. இந்த அணை வகுத்து மலை, செம்பூத்துகரடு, சிறுமலை தொடர்ச்சி மற்றும் மஞ்சமலையினால் சூழப்பெற்றுள்ளது. தென்மேற்குப் பருவமழை பொய்த்துவிட்டதால் அணை வறண்டுவிட்டது. இதனால் கீழசின்னணம்பட்டி, எர்ரம்பட்டி, அய்யூர், சுக்காம்பட்டி, ஆதனுார் உள்ளிட்ட பத்து கிராமக் கண்மாய் பாசன விவசாயிகள் கவலையில் உள்ளனர்.