சென்னை, ஏப்.17- நடப்பு ஆண்டின் கல்லூரி இறுதி பருவத் தேர்வுகள் அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் எதிரொலியாக தமிழ கத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலை யில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்ப ட்டுள்ளது. இதையடுத்து, நடப்பு ஆண்டின் கல்லூரி இறுதி பருவத் தேர்வுகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ள தகவலில், ‘நடப்பு ஆண்டின் கல்லூரி இறுதி பருவத் தேர்வுகள் அடுத்த கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடக்கப்படும். அதாவது ஜூன் மாதத்தில் கல்லூரிகள் அனைத்தும் திறக் கப்பட்ட பின்னர் முந்தைய பருவத் தேர்வு நடை பெறும், அதன்பின்னர் அடுத்த கல்வி ஆண்டின் பாட வகுப்புகள் தொடங்கும்’ என்று கூறப் பட்டுள்ளது.