tamilnadu

img

கல்லணையில் காவிரி ஒழுங்காற்றுக்குழுவினர் ஆய்வு

தஞ்சாவூர், அக்.31–  காவிரி ஒழுங்காற்று குழுவினர் வியாழக்கிழமையன்று கல்லணையை பார்வையிட்டு, அணையின் கட்டமைப்பு, டெல்டா பாசன முறைகளை கேட்டறிந்தனர்.  காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் கூட்டம் வியாழக்கிழமை திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக, காவிரி ஒழுங்காற்றுக்குழு தலைவரும், மத்திய நீர்வளத்துறை செயலாளருமான நவீன்குமார் தலைமையில், செயலாளர் நிரஜ்குமார், உதவி இயக்குநர் ராம்பால்சிங், தமிழக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உட்பட நான்கு மாநில பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள், காவிரி தொழில்நுட்பக் குழுவினர் என மொத்தம் 16 பேர் கொண்ட குழுவினர், தஞ்சை மாவட்டம் கல்லணையில் ஆய்வு மேற் கொண்டனர்.

அப்போது, கல்லணையின் கட்டமைப்பு, காவிரியின் பயன்பாடு, டெல்டா பாசன வசதி பெறும் பகுதிகள் உள்ளிட்டவை குறித்து, காவிரி தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். மேலும், கல்லணையில் இருந்து பிரியும் காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணை கால்வாய் பகுதிகளையும் பார்வையிட்டு சென்றனர். கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், பொறியாளர் ராஜன், உதவி செயற் பொறியாளர் ஆனந்தன், உதவி பொறியாளர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.