வதோதரா, ஜூன் 15- குஜராத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 4 தொழிலாளர்கள் உட்பட 7 பேர் பலி யாகினர். குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள பர்திகுய் எனும் கிராமம் உள்ளது. ஜூன் 14 வெள்ளி இரவு இங்குள்ள தர்ஷன் ஹோட்டலில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் வேலை நடைபெற்றது. அப் போது விஷ வாயு தாக்கியதில் மகேஷ் பதன்வாடியா, அசோக் ஹரிஜன், பிரி ஜேஷ் ஹரிஜன், மகேஷ் ஹரிஜன் ஆகிய தொழிலாளர்கள் பலியாகினர். அந்த ஹோட்டலில் பணியாற்றி வந்த விஜய் சவுத்ரி, சக்தேவ் வாசவா, அஜய் வாசவா ஆகியோரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர். இதுகுறித்து தாபோய் போலீசார் விசாரணை செய்தனர். ஹோட்டல் உரிமையாளர் ஹாசன் அப்பாஸ் போரானியாவின் அலட்சியமே இதற்குக் காரணம் என்று கூறி, சனி யன்று காலையில் அவரைக் கைது செய்தனர். பணிக்கு வந்த தொழிலாளர்களில் முதலில் மகேஷ் பதன்வாடியா கழிவு நீர்த் தொட்டியில் இறங்கியுள்ளார். உள்ளே சென்றபிறகு அவரிடம் இருந்து பதில் வராததால், அவரைக் காப் பாற்றும் நோக்கில் மற்றவர்கள் ஒவ்வொருவராக உள்ளே இறங்கிப் பலியாகினர். தாபோய் நகராட்சியில் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்தவர்களை வெளியே எடுப்பதற்கான உபகரணம் ஏதும் இல்லை. இதனால், வதோதரா தீயணைப்பு நிலையத்தில் இருந்து உபகரணங்கள் வரவழைக்கப்பட்டு 7 சடலங்களும் வெளியே எடுக்கப்பட்ட தாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.