tamilnadu

img

ஓய்வூதியம் வழங்க பரிசீலனை: உணவுத்துறை அமைச்சர்

சென்னை, ஜூலை 3- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்  வூதியம் வழங்க அரசு பரிசீலித்து  வருகிறது என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார். உணவு மற்றும் நுகர்வோர் பாது காப்புத்துறை மானியத்தின் மீது புதனன்று (ஜூலை 3) பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் செங்குட்டுவன், நுகர்பொருள் வாணிப கழக ஊழி யர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அமைக்கப்பட்ட அதிகாரிகள் குழு அறிக்கை அளித்துள்ளது. எனவே, ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆர்.காமராஜ், ஒரு கழகத்தில் பணி யாற்றும் ஊழியர்களுக்கு ஓய்வூதி யம் கொடுத்தால் மற்ற கழகங்க ளில் பணியாற்றும் ஊழியர்க ளுக்கும் வழங்க வேண்டிய சூழல்  உருவாகும். இதுபோன்ற சில பிரச்ச னைகள் இருப்பதால் அதுகுறித் தெல்லாம் அரசு பரிசீலித்து வரு கிறது என்றார்.

புதிய அறிவிப்புகள்

இதன்பின்னர் அமைச்சர் காம ராஜ் சில அறிவிப்புகளை வெளி யிட்டார்.  13 கோடி ரூபாய் செலவில்  தலா 4ஆயிரம் சதுர அடி பரப்பில் 100 இடங்களில் நெல் உலர்த்தும் களங்கள் அமைக்கப்படும். 15 கோடி ரூபாய் செலவில் 25 நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டப்படும். முதி யோர் ஓய்வூதிய திட்டம், அன்னப்  பூர்ணா திட்டம் ஆகியவற்றில் உள்ள  4.30 லட்சம் பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கப்  படும் உள்ளிட்டவை  அந்த அறி விப்புகள் ஆகும்.