ஒரே தெருவில் தேர்ச்சிபெற்ற 12 பேருக்கு சம்மன் இன்று ஆஜராக சிபிசிஐடி உத்தரவு
கடலூர், பிப்.18- டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரே தெருவை சேர்ந்த 12 பேர் இன்று ஆஜராக வேண்டும் என்று சிபிசிஐடி போலீசார் அவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் நடத்தும் குரூப்-4, குரூப் 2-ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். \
இந்த நிலையில் 2011-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-2 தேர்வில் கடலூர் அருகே உள்ள கிராமமான கிழக்கு ராமா புரத்தை சேர்ந்த 12 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாகவும், இதில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு உள்ளதால் அது பற்றி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள், கட லூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசா ருக்கு உத்தரவிட்டனர். இதனையடுத்து, தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையத்தால் கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வு சம்பந்த மாக விசாரணைக்கு புதன்கிழமையன்று காலை 11 மணிக்கு கடலூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, 12 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.