tamilnadu

img

ஆக.9-ல் ஓபிசி மாணவர்கள் இடஒதுக்கீடு உரிமை மாநாடு

வாலிபர்-மாணவர் சங்கம் சார்பில் நடைபெறுகிறது

சென்னை,ஆக.05- ஓபிசி மாணவர்கள் இட ஒதுக்கீடு உரிமை மாநாடு இணையம் வழியாக ஆகஸ்ட் 9 அன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்,  இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடத்தப்படு கிறது. இதுகுறித்து வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்திலுள்ள மருத்துவக்கல்லூரி களில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக ஒதுக்கப் படும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காத நிலையே தொடர்ந்து வருகிறது. இந்நிலை யில், தமிழ்நாட்டிலிருந்து அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக ஒதுக்கப்படும் மருத்துவ மற்றும் மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக் கான இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக மக்களும், பல்வேறு அரசியல் கட்சி களும் தொடர்ந்து முன்வைத்து வந்தன. ஆனாலும், மத்திய அரசு தமிழக மக்களின் குரலுக்கு செவிகொடுக்காத நிலை யில் தமிழக அரசும், பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழ்நாட்டிலிருந்து வழங்கப் படும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சத மானம், பட்டியலின மாணவர்களுக்கு 18 சத மானம் மற்றும் பழங்குடியின மாணவர் களுக்கு 1 சதமானம் என 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்கிட உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமை யிலான அமர்வு வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது. அத்தீர்ப்பில், மாநி லங்கள் வழங்கியுள்ள அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில் பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீட்டினை வழங்கிட வேண்டும். எனவே, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்டோ ருக்கான இட ஒதுக்கீடு பிரச்சனையை மூன்று மாதங்களுக்குள் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர், மத்திய அரசின் சுகா தாரத்துறை செயலாளர், மருத்துவக் கவுன்சில் அதிகாரி ஆகிய மூவர் கொண்ட  குழு முடிவெடுத்து அறிவிக்க வேண்டு மென உத்தரவிட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டலில் செயல் படும் மத்திய பாஜக அரசு தொடர்ந்து இட ஒதுக்கீட்டுக் கொள்கையை சிதைக்கும் நடை முறையையே பின்பற்றி வருகிறது. பொருளா தாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பின ருக்கான இட ஒதுக்கீட்டை அமலாக்குவதில் வேகம் காட்டிய மத்திய அரசு, ஐ.ஐ.டி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடி மாணவர்களுக்கான இடஒதுக் கீட்டை முறையாக அமலாக்காமல் வஞ்சித்து  வந்துள்ளது. இந்த வழக்கிலும் கூட மத்திய அரசின் சார்பிலும், மத்திய மருத்துவக் கவுன்சில் சார்பிலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வாக்குமூலத்தில் இதே அணுகுமுறையை மத்திய அரசு மேற்கொண்டிருந்தது. எனவே, பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தக் கூடிய முறை யில் உயர்நீதிமன்றம் குறிப்பிட்ட நடவடிக்கை களை உடனடியாக மேற்கொள்வதற்காக மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.  தமிழகத்தின் சமூக நீதி பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய முறை யிலும், மருத்துவக் கல்வியில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழகத்திலுள்ள சட்டத்தின் அடிப்படையில் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வலியுறுத்தியும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாண வர் சங்கம் சார்பில் இணையம் வழியாக, ஓபிசி மாணவர்கள் இட ஒதுக்கீடு உரிமை மாநாடு நடைபெறவுள்ளது.   2020 ஆகஸ்ட் 9 மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள இம்மாநாட்டில் வழக்கறிஞரும் நாடாளு மன்ற உறுப்பினருமான வில்சன், தீக்கதிர் ஆசிரியர் தோழர் மதுக்கூர் ராமலிங்கம், வழக் கறிஞர்  ஸ்டாலின் அபிமன்யு ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். சமூகநீதிக் குரலை ஓங்கி ஒலிக்கும் இம்மாநா ட்டில் பங்கெடுக்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பு மாணவர்களையும், இளைஞர்களையும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழுக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.