சென்னை, அக். 18- அரசு சிறப்பு விடுமுறை அறிவிப்பு, தனியார் நிறுவனங்களுக்கு நேரடி யாக பொருந்தாது என சென்னை உயர்நீதிமன்றம் விளக்கமளித் துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் கால மானபோது, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஜூலை 30ஆம் தேதி தமிழ்நாடு அரசு பொது விடுமுறை அறிவித்தது. இதன்படி, கிருஷ்ணகிரி மாவட் டத்தில் உள்ள தனியார் தொழிற் சாலை, தனது, முதல் மற்றும் பொது ஷிப்ட் ஊழியர்களுக்கு மட்டும் ஊதியத்துடன் விடுமுறை அளித்தது.
மதியம் மற்றும் இரவு நேர ஷிப்ட் ஊழியர்களுக்கு, விடுமுறை அறி விக்க நிபந்தனை வெளியிட்டது. இதை ஏற்காமல், ஜூலை 30ஆம் தேதி விடுப்பு எடுத்தவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதுதொடர்பான வழக்கில், 47 ஊழியர்களுக்கும் ஊதி யம் வழங்க சேலம் தொழிலாளர் நீதி மன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தனியார் நிறு வனம் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணி யம் முன் வெள்ளியன்று (அக். 18) விசாரணைக்கு வந்தது. அப்போது, மாற்றுமுறை ஆவணச் சட்டத்தின் படி அறிவிக்கப்படும் அரசு விடுமுறை தனி யார் நிறுவனங்களுக்கு நேரடியாக பொருந்தாது என நீதிபதி தெளிவு படுத்தினார். நிபந்தனையுடன் விடுமுறை அளிக்க நிறுவனம் முன் வந்த போதும், அதை ஏற்காத ஊழியர்களுக்கு அன்றைய தினம் ஊதியம் பெற உரி மையில்லை எனக்கூறி தொழிலாளர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து நீதி பதி சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.