tamilnadu

img

ஊரடங்கு உத்தரவு : போலீஸ் பாதுகாப்புடன் 6 திருமணங்கள்!!

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சாத்தான்குளம் பகுதியில் திங்களன்று 6 திருமணங்கள் போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் திருமணம், கோயில் விழாக்கள், தேவாலயங்களில் பிரார்த்தனைகளில் மக்கள் கூடுவதை தவி்க்கும் வகையில் தடை செய்யப்பட்டுள்ளன. நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் அரசு விதிப்படி 30 போகலுடன் நடத்தப்படலாம் என அரசு அனுமதியுள்ளது. அதன்படி, சாத்தான்குளம், காந்திநகா், அமுதுண்ணாக்குடி, மடத்துவிளை, பழனியப்பபுரம், சடையன்கிணறு ஆகிய பகுதியில்  6 திருமணங்கள் நடைபெற்றன.இதற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.