tamilnadu

சென்னை மற்றும் உடுமலை முக்கியசெய்திகள்

இறுதி செமஸ்டர் தேர்வு: அண்ணா பல்கலை.  விரைவில் அறிவிப்பு 

சென்னை, ஆக. 28- அண்ணா பல்கலையில் இறுதி செமஸ் டர் தேர்வு எப்போது நடத்தப்படும் என்று விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரி வித்துள்ளது. அண்ணா பல்கலையில் இறுதியாண்டு  தேர்வுகள் நடத்தலாம் என்று உச்சநீதி மன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பையடுத்து, விரைவில் தேர்வு நடத்தப்பட பல்கலைக் கழக நிர்வாகம் ஆயத்தமாகி வருகிறது. மேலும், இறுதி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடி யாகவோ நடத்தப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் நடை பெற்று வருவதால், விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். இதனால், மாணவர்கள் தேர்வுக்குத்  தயாராக இருங்கள் என்று அண்ணா பல் கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி காலமானார்

சென்னை,ஆக.28- கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியனின் மனைவி கலைச்செல்வி உடல்நலக்குறைவால் வெள்ளியன்று (ஆக.28)காலமானார். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண் யம் ஓரடியம்புலம் கிராமத்தைச் சேர்ந்த கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்  சர் ஓ.எஸ். மணியனின் மனைவி கலைச்  செல்வி உடல்நிலைக் குறைவு காரண மாக, சென்னையில் உள்ள தனியார் மருத்து வமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

 திருமூர்த்தி அணை பாசனத்திற்கு திறப்பு

உடுமலை, ஆக.28- உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி  அணையிலிருந்து பிஏபி இரண்டாம் மண்டல பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் சுமார் நான்கு லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இது நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு இரண்டு மண்டலங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இரண்டாம் மண்டல பாசன பகுதிகளில் உள்ள 94 ஆயிரம் ஏக்கர்  கள் பயன் பெறும் வகையில் உடுமலையை  அடுத்துள்ள திருமூர்த்தி அணையிலிருந்து வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில்  தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம்  கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, சூலூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உடு மலை, தாராபுரம், மடத்துக்குளம், பல்லடம்,  திருப்பூர் ஆகிய வட்டங்களில் உள்ள மொத்  தம் 94 ஆயிரம் ஏக்கர்கள் பயன்பெற உள்ளது. மேலும் தளி வாய்க்கால் பாசனத்திற்கு உட்பட்ட பழைய ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள 2786 ஏக்கர்கள் பயன்பெறும் வகை யிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணைப் பகுதியில் உள்ள தானியங்கி பொத்தானை அழுத்தி கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர்  இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

தேசியக் கொடியை அவமதித்த வழக்கு: மீண்டும் எஸ்.வி.சேகர் ஆஜர்

சென்னை, ஆக.28- நடிகர் எஸ்.வி.சேகர் யூ டியூபில் வெளி யிட்ட வீடியோவில், காவியைக் களங்கம் எனக் கூறும் முதலமைச்சர் தேசியக் கொடி யில் காவியை அகற்றிவிட்டுக் கொடி யேற்றுவாரா எனப் பேசினார். இது தொடர்பான புகாரில் தேசியக்  கொடியை அவமதித்ததாகக் கூறி  சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்த னர். இந்த வழக்கில் ஏற்கெனவே கடந்த 24ஆம் தேதி விசாரணைக்கு ஆஜரான எஸ்.வி.சேகர், இரண்டாம் முறையாக ஆக‌.28  அன்று ஆஜரானார். 

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு 

சென்னை,ஆக.28- தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரண மாக, கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு  உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட் டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். செப்டம்பர் 1 வரை தென்மேற்கு, மத்திய மேற்கு  அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.