tamilnadu

img

காவல் நிலையத்தில் மகனை தலைமைக்காவலர் சுட்டுக்கொன்றதால் பதற்றம்

உத்தரபிரதேச மாநிலத்தில் காவல் நிலையத்தில் மகனையே தலைமைக்காவலர் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் அரவிந்த் யாதவ், அவரது மகன் விகாஸ் (18) இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.  வாக்கு வாதம் முற்றிய நிலையில் காவல் நிலையத்திலேயே வியாழனன்று மகனை தலைமைக்காவலர்   சுட்டுக்கொலை  செய்தார். 
இதுதொடர்பாக துணை ஆய்வாளர் சுமித் சுக்லா கூறுகையில், தலைமைக் காவலர் அரவிந்த் யாதவ், சமீபத்தில் சௌரி-சௌரா காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். அங்கு அவரது முதல் மனைவியின் மகன் விகாஸ், வியாழக்கிழமை காலை சந்தித்துள்ளார்.   அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. அச்சமயம் காவலர் அரவிந்த், தன்னிடம் இருந்த போலீஸ் துப்பாக்கியைப் பயன்படுத்தி அவரது மகனை சுட்டார். இதில் விகாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து  தலைமைக் காவலர் அரவிந்த் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.