தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் சூழல் தற்போது இல்லை என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இதில் 3 மாத அவகாசம் தர வேண்டும் என்று தமிழக மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உள்ளாட்சி தேர்தல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.
தமிழக அரசு தாக்கல் பிரமாண பத்திரத்தில் வார்டு வரையறை பணி முடியும் தறுவாயில் இருப்பதாக தெரிவித்து. மேலும் மக்களவை தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் உடனே உள்ளாட்சி தேர்தல் நடத்துவது சாத்தியம் இல்லை என்றும், வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியுள்ளதால் உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த முடியாத சூழல் உள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்தது. மேலும் இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் பெறவில்லை என்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை மே 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.