tamilnadu

img

ஹத்ராஸ் சம்பவ சிபிஐ விசாரணையை அலகாபாத் உயர்நீதிமன்றமே கண்காணிக்கும்... உச்சநீதிமன்றம் அறிவிப்பு

புதுதில்லி;
ஹத்ராஸ் தலித் இளம்பெண் பாலியல் வன்கொலை வழக்கு விசாரணையை அலகாபாத் உயர்நீதிமன்றமே கண்காணிக்கும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் இளம்பெண்ணை உயர்சாதி குண்டர்கள் கொடூரமாக பாலியல் வன்கொலை செய்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. பெண்ணின் கொலைக்கு நீதி கேட்டும் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  

குற்றவாளிகளுக்கு ஆதரவாக பாஜக யோகி அரசு இருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி னர். இதனையடுத்தே இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந் துரைத்தார்.இந்நிலையில் உச்சநீதிமன்றத் தில் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ‘ஹத்ராஸ் விவகாரத்தை உச்சநீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தின் ஓய்வு நீதிபதி தலைமையிலான சிறப்பு குழு கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் இதில் நடந்த உண்மை என்னவென்றால் வெளிப்படையாக தெரியவரும்.சிபிஐ விசாரணையாகவே இருந்தாலும் கூட ஓய்வு பெற்ற நீதிபதிகளின் கண்காணிப்பில் தான் அது நடைபெற வேண்டும். குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் இந்த விசாரணை நடைபெற்றால் அது நிச்சயம் நியாயமானதாக இருக்காது என்பதால் வழக்கை தில்லிக்கு மாற்றி, அதனை நடத்தி முடிப்ப தற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றுகோரப் பட்டது.கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரும் தாங்கள் பாதுகாப்பாக தில்லி செல்ல அரசு உதவவேண்டும் என்றும் வழக்கை வேறு மாநிலத்தில் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர். 

உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு
இந்நிலையில் மேற்கண்ட மனுக்கள் அனைத்தின்  மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தின் தலைமைநீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமை யிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுமுன்பு அக்டோபர் 27 செவ்வாயன்று நடைபெற்றது. அப்போது  ஹத்ராஸ் பெண் பாலியல் கொலை வழக்கை கண்காணிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அலகாபாத் உயர்நீதிமன்றமே ஹத்ராஸ் வழக்கு விசாரணையை கண்காணிக்கும். வழக்கு விசாரணையை தில்லிக்குமாற்றுவது குறித்து உச்சநீதிமன்றம் முடிவு எதுவும் எடுக்கவில்லை. சிபிஐ தனது நிலை அறிக்கைகளை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும். சிபிஐ விசாரணையை முடிவுக்குக் கொண்டுவருவது பொருத்தமானது. சிபிஐ விசாரணையை முடித்த பிறகு வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றுவது பற்றி பரிசீலிக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.