ஈரோடு, ஆக.12- மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடக்கும் ஈரோடு புத்தக திருவிழாவில் இது வரை 7 லட்சம் பேர் வரை வருகை புரிந் துள்ளனர் என மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் தெரி வித்துள்ளர். ஈரேட்டில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் ஈரோடு புத்தக திருவிழா நடை பெற்று வருகின்றது. இந்நிலையில் திங்க ளன்று மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் செய்தியாளர் களிடம் கூறுகையில், தற்பேது 15ஆவது ஆண்டாக 230 அரங்கில் அதிக அளவில் நூல்கள் விற்பனையாகி உள்ளது. புதிய நூல் களையும், அறிவியல், இலக்கியம், வாழ்க்கை வரலாற்று நூல்களை அதிக மாக வாங்கி சென்றுள்ளனர். நடப் பாண்டில் 3 லட்சம் மாணவர்கள் உள் ளிட்ட 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் இங்கு வந்து சென்றுள்ளனர். ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி பல் வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வந்துள்ளனர். மலேஷியா, நார்வே, ஸ்பெ யின், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் என பல் வேறு நாட்டை சேர்ந்த பார்வையாளர்கள், புத்தகம் வாங்குவோர் வந்துள்ளனர். மேலும், தினமும் மாலையில் நடக்கும் செற்பெழிவு மற்றும் சிந்தனை அரங்கில், மிகச்சிறந்த பேச்சாளர்கள், நாடகம், சிறந்த, 15 பெண் ஆளுமைகள் போன்றோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புக்கான ஜி.டி.நாயுடு விருதும், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும், கோவையை சேர்ந்த உதவி பேராசிரியர் முனைவர் எஸ்.பாஸ்கர் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது. புத்தகம் வாங்க வருவோருக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் வழங்குவதற்காக, 15 ஆயிரம் மரக்கன்றுகள் ஏற்பாடு செய் யப்பட்டது. கடந்த நான்கு நாட்களாக, ஆர்வத்துடன், 8 ஆயிரம் மரக்கன்றுகளை வாங்கி சென்றுள்ளனர். ஞாயிறு மற்றும் திங்களன்று முழு அளவில் மரக்கன்று களை வாங்கி செல்ல ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. கடந்தாண்டு, ரூ.7 கோடிக்கு மேல் புத்த கங்கள் விற்பனையானது. இந்தாண்டும், அதைவிட குறையாத அளவுக்கு புத்தகம் விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம். மாணவ, மாணவியருக்கு சேமிப்பு பழக் கத்துடன், புத்தகங்கள் வாங்க வேண்டும், வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில், உண்டியல் முறை கொண்டு வரப்பட்டது. 15 ஆயிரம் உண்டி யலுக்கு மேல் வழங்க திட்டமிடப்பட்டு, 80 சதவிகிதத்துக்கு மேல் குழந்தைகள் உண்டி யலை பெற்று சென்றுள்ளனர். கடந்தாண்டு பெற்று சென்ற உண்டியல்களில், 10 ஆயிரத் திற்கும் மேற்பட்ட உண்டியல்களை கொண்டு வந்து, அதில் சேகரித்த தொகைக்கு புத்தகங்களை வாங்கி சென் றுள்ளனர். இதேபோல், ரூ.250 மேல் புத்தகங்கள் வாங்கினால், அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அவ்வாறு, 5 ஆயிரத் திற்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் வழங்கப் பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.