மாட்டுடன் மூதாட்டி மனு
ஈரோடு, ஜூன் 10- சொத்து பிரச்சனையால் மூதாட்டியை கடப்பாறை யால் தாக்கி, மாட்டின் கண்ணை குத்தி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஈரோடு மாவட்ட ஆட்சி யரிடம் மாட்டுடன் வந்து மூதாட்டி மனு அளித்தார். பெருந்துறை தாலுகா, காஞ்சிகோவில் அருகே செங் கோடம்பாளையம் நாடாகாட்டுத்தோட்டத்தை சேர்ந்த வர் சின்னப்பகவுண்டர் மனைவி வள்ளியம்மாள் (70). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சின்னப்ப கவுண்டர் இறந்துவிட்ட நிலையில், வள்ளியம்மாளுக் கும், அவர்களது உறவினர்களுக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. இப்பிரச்சனை தொடர்பாக, வள்ளி யம்மாள் வீட்டுக்கு வந்த உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆத்திரம் அடைந்த உறவினர்கள், கடப்பாறை கம்பியால் வள்ளியம்மாளை தாக்கிவிட்டு, அவர்கள் வளர்த்து வரும், இரண்டு எருமை மாட்டையும் கம்பியால் தாக்கினர். அதில், ஒரு மாட்டின் கண்ணை குத்தி சென்றனர். இதுபற்றி, காஞ்சிகோவில் காவல் நிலையத்தில் புகார் செய்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆளும் கட்சி நிர்வாகிகள் சிலர், எதிர் தரப்பினருக்கு உதவு வதால், காஞ்சிக்கோவில் காவலர்கள் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். இதுபற்றி மாவட்ட ஆட்சியர் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம்
ஈரோடு, ஜூன் 10- ஈரோடு மின் பகிர்மான வட்ட மாதாந்திர மின் பயனீட் டாளர் குறைதீர் கூட்டம் ஜூன் 12 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற உள்ளது. செயற்பொறியாளர் – தெற்கு, கோட்ட அலுவலகம், 948, ஈ.வி.என்.சாலை, ஈரோடு–9 என்ற விலாசத்தில் நடக்கும் இக்கூட்டத்தில், மின் பயனீட்டாளர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.