tamilnadu

img

கொரோனா எதிரொலி- கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை

கோபி, மார்ச் 15- கொடிவேரி தடுப்பணை அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மார்ச் 31 ஆம் தேதி வரை தடைவிதித்துள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவிக்கு கோவை, நீல கிரி, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட் டங்களிலிருந்தும் கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி போன்ற வெளிமாநிலங்களி லிருந்தும் விடுமுறை தினங்களிலும் பண் டிகைக் காலங்களிலும் பல்லாயிரக்கணக் கான சுற்றுலா பயணிகள் வருவது வழக் கம்.  கோடைகாலம் தொடங்கியுள்ள நிலை யில் ஞாயிறன்று விடுமுறை  என்பதாலும், ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும் பத்தினருடனும், நண்பர்களுடனும் வந்தி ருந்தனர். இந்நிலையில், கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவ டிக்கையாக தமிழக அரசு சுற்றுலா தலங் கள், கோயில்கள் உள்ளிட்ட கூட்டம் அதி கம் கூடும் இடங்களுக்கு தடை விதித் துள்ளது. இதனடிப்படையில், கொடிவேரி தடுப்பணைக்கு வரும் சுற்றுலா பயணிக ளுக்கு மார்ச் 31 ஆம் தேதி வரை மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.  இதன் காரணமாக, கொடிவேரி தடுப் பணை அருவில் குளித்துக் கொண்டி ருந்த சுற்றுலாப் பயணிகளைப் பொதுப் பணித்துறையினர் வெளியேற்றினர். இதனைத்தொடர்ந்து நுழைவுச்சீட்டு விநியோகமும் நிறுத்தப்பட்டு அணை நுழைவு வாயில் கதவுகளும், சிறுவர் பூங்கா கதவுகளும் மூடப்பட்டன. இதனால் தொலைதூரத்திலிருந்து வந்திருந்த சுற்று லாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும் பிச் சென்றனர்.  இதற்கிடையில் கொடிவேரி தடுப் பணை அருவிப்பகுதியில் தற்காலிக கடை கள் அமைத்து மீன் வருவல் விற்பனை செய்யும் வியாபாரிகளும் விடுமுறை என் பதால் அதிகளவு மீன்கள் வாங்கி வைத்தி ருந்ததாகவும், தற்போது சுற்றுலாப் பயணி களுக்கு தடை என்பதால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வருத்தம் தெரி வித்தனர்.