tamilnadu

img

தோழர் வி.முருகேசன் நினைவேந்தல் பொதுக்கூட்டம்

திருச்செங்கோடு, ஜன. 16-  திருச்செங்கோடு ஒன்றிய வாலிபர் சங்க முன்னாள் நிர்வாகி தோழர்  வி.முருகேசன் நினை வேந்தல் பொதுக்கூட்டம் அண்மையில் நடை பெற்றது.  திருச்செங்கோடு ஒன்றியம், ஆனங்கூர் பகுதிக்குட்பட்ட நல்லா கவுண்டம்பாளையம் பகத்சிங் நகரைச் சேர்ந்த தோழர் வி.முருகேசன். இவர் 1990 ஆம்  ஆண்டு முதல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் உறுப்பினர் இணைத்துக் கொண்டு செயல்பட தொடங்கினர். ஏராள மான இளைஞர்களை வாலிபர் சங்கத்தில்  இணைத்து முன்னணி ஊழியர்களாக்கி யவர் முருகேசன். இதனைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை  செயலாளராகவும், ஒன்றிய குழு உறுப்பி னராகவும் செயல்பட்டு வந்தார். இரண்டு முறை ஆனங்கூர் ஊராட்சியின் வார்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியில் ஈடுபட்டு வந்தார். இவ்வாறு அனைத்து தரப்பு மக்களின் நன் மதிப்பை பெற்ற முருகேசன் கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி மாரப்படைப்பால் உயிரிழந்தார். அவருக்கு சம்பூரணம் என்ற மனைவியும், பவனிதா (12 ), தமிழினி (4 ) என்ற மகள்களும் உள்ளனர்.  இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் தோழர்  வி. முருகேசனின் படத்திறப்பு மற்றும் நினை வேந்தல் பொதுக்கூட்டம் நல்லா கவுண்டம்பாளையத்தில் நடைபெற்றது. கிளை செயலாளர் ஜி.சக்திவேல் தலைமை  வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப் பினரும், ஆண்டிபாளையம் ஊராட்சி மன்ற  தலைவருமான ஏ.ஆதிநாராயணன் செங் கொடியை ஏற்றி வைத்தார். மாநில குழு  உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் முருகேசனின் படத்தைத் திறந்து வைத்து  சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி. பெருமாள், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.தனபால்,  ஒன்றிய செயலாளர் ஆர்.வேலாயுதம், நகர செயலாளர் ஐ.ராயப்பன், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.சேகரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் எம்.கணேஷ்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;