tamilnadu

img

விறகு வெட்டச் சென்றவர் யானை தாக்கி பலி

சத்தியமங்கலம் அருகே யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கொத்தமங்கலம் வனப்பகுதியில் கூலித் தொழிலாளி வெங்கிட்டான் என்பவர் விறகு எடுக்கச் சென்றுள்ளார். அப்போது, அவரை யானை தாக்கியுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர், வெங்கிட்டான் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.