தமிழக முழுவதும் மான் மார்க், பிந்து அப்பளம், பாப்புலர், மதுரை மீனாட்சி அப்பளம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட டிரேட் மார்க் அப்பள நிறுவனங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான நிறுவனங்கள் அப்பளங்களை வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்கின்றன. இந்த டிரேட் மார்க் நிறுவனங்கள் இல்லா மல் நூற்றுக்கணக்கானோர் வீட்டி லேயே சிறிய அளவில் அப்பளம் தயாரித்து விற்பனை செய்பவர்க ளும் உள்ளனர்.
இந்தத் தொழிலில் மாநிலம் முழு வதும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். தலைநகரான சென்னையிலேயே 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரம், மதுரை, சென்னை, சென்னை புறநக ரில்தான் அதிகளவில் அப்பளம் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு அப்பளத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் டி.சி.ரரேஷ் கூறுகையில், டிரேட் மார்க் நிறுவனங்கள் சொந்தமாக தொழிலாளர்களை பணியமர்த்தி அப்பளம் தயாரிப்பதில்லை. அப்படி தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் அவர்களுக்கு இ.எஸ்.ஐ., வருங்கால வைப்பு நிதி போன்றவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும். இதை தவிர்ப்பதற்காக இந்த நிறுவனங்கள் அப்பளத்திற்கு தேவையான மாவு மூட்டைகளை ஒப்பந்ததாரர்களிடம் (முகவர்களி டம்) வழங்கி அப்பளத்தை தயார் செய்து பெற்றுக் கொள்கிறார்கள். மாநிலம் முழுவதும் 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த நிறு வனங்கள் உள்ளன. இந்த ஒப்பந்த நிறுவனங்களில் 10 பேர் முதல் 100 பேர் வரை வேலை செய்கிறார்கள். இந்த ஒப்பந்தாரர்களிடம் பணி புரி யும் ஊழியர்களுக்கு இ.எஸ்.ஐ. வருங்கால வைப்பு நிதி போன்ற எந்த சலுகையும் கிடையாது. பணிக்கு வந்தால் கட்டுக்கு இவ்வளவு கூலி என வழங்கப்படும். உடல்நிலை பாதிக்கப் பட்டால் கூட எந்த நிவாரனமும் கிடை யாது.
தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவ தும் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளதால் அப்பள வியாபாரம் முற்றிலுமாக குறைந்து விட்டது. மேலும் ஏற்றுமதியும் கிடையாது. இத னால் தொழிலாளர்கள் வேலையின்றி வாழ்வாதாரமின்றி தவிக்கின்றனர். அந்த தொழிலாளர்களுக்கு டிரேட் மார்க் நிறுவனங்கள் எந்த உதவி யும் செய்யவில்லை. பெரும்பான்மை யான தொழிலாளர்கள் நலவாரி யத்தில் பதிவு செய்து இருக்க மாட்டார்கள். ஆகையால் அரசு அறி வித்துள்ள நிதியும் இந்த தொழிலா ளர்களுக்கு கிடைக்காது. அரசு டிரேட் மார்க் நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்த நிறுவனங்களின் பெயர் பட்டியலை பெற்று, அவர்க ளிடம் பணிபுரியும் தொழிலாளர் களை கணக்கிட்டு அவர்களுக்கும் நிதி உதவி அளித்து, அந்த தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டிரேட் மார்க் நிறு வனங்களும் இந்த தொழிலாளர்க ளுக்கு உதவ முன்வர வேண்டும் என்றார்.
சிறிய அளவில் அப்பளம் தயா ரித்து விற்பனை செய்யும் பிரேமன் என்பவர் கூறுகையில், பெரும்பாலும் இந்தத் தொழிலில் குடும்பமே இணைந்து வேலை செய்வார்கள். மழைக்காலங்களில் மட்டும்தான் அப்பள வியாபாரம் அமோகமாக நடைபெறும். கோடைக் காலங்க ளில் அப்பள வியாபாரம் சுமா ராகத்தான் இருக்கும். கோடை காலங் களில்தான் அப்பளத்தை காய வைக்க முடியும். அதனால் கோடைக் காலங்களில் அப்பள உற்பத்தி அதி களவில் நடைபெறும்.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் மாவின் விலை 700 ரூபாய் முதல் 1,000 வரை கூடியுள்ளது. தற்போது இந்த தொழிலிலும் டிரேட் மார்க் நிறுவனங்கள் இயந்திரங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து விட்டதால் பலர் வேலை இழந்து வரு கின்றனர். கையில் அப்பளம் தயா ரிப்பவர்களை விட, இயந்திரங்களை பயன்படுத்தி அப்பளம் தயாரிப்ப வர்கள் சந்தையில் குறைந்த விலை யில் அனைத்து வகையான அப்பளங் களையும் விற்பனை செய்கிறார் கள். இதனால் சிறிய அளவில் அப்பளம் தயாரித்து விற்பனை செய்து வந்த வர்களும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே அரசு அப்பளத் திற்கு விலை நிர்ணயம் செய்து இந்த தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-அம்பத்தூர் ராமு