சென்னை, ஜூன் 7- தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு சனிக்கிழமையும் (ஜூன் 8) ஞாயிற்றுக்கிழமையும் (ஜூன் 9) நடைபெற வுள்ளது. 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் தேர்வு எழுதுகிறார்கள். மத்திய அரசின் கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து வகை பள்ளிகளி லும் ஆசிரியராக பணியில் சேருவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது அவசியம். தமிழகத்தில் இந்த தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நடத்தி வருகிறது. அதேபோல், 23.8.2010க்கு பிறகு பணி யில் சேர்ந்த அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரி யர்களும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அவர்க ளும் இந்த தேர்வை எழுத இருக்கின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி முதல் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி வரை இணையதளம் மூலம் மொத்தம் 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பித்து இருந்தனர். விண்ணப் பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் கடந்த மாதம் 26 ஆம் தேதி வெளியிடப்பட்டன. இவர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 8.9 தேதிகளில் தமிழகம் முழு வதும் நடைபெறவுள்ளது. சனிக்கிழமை முதல் தாள் தேர்வும், ஞாயிற்றுக்கிழமை 2ஆம் தாள் தேர்வும் நடக்கிறது. 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை ஆசி ரியராக பணியாற்ற முதல் தாள் தேர்வை யும், 8ஆம் வகுப்பு வரை பணியாற்ற 2ஆம் தாள் தேர்வையும் எழுத வேண்டும். இதற்காக தமிழகம் முழுவதும் 32 மாவட் டங்களில் 1,552 மையங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. சென்னையில் 88 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.