tamilnadu

img

இத்தாலியிலிருந்து மதுரை வந்தவருக்கு தொண்டை வலி

மதுரை  மருத்துவமனையில் அனுமதி

மதுரை, மார்ச் 9-  தொண்டை வலி காரணமாக இத்தாலி நாட்டிலிருந்து மதுரை வந்த இளைஞர் சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இத்தாலி நாட்டிலிருந்து பிப்.29-ஆம் தேதி தில்லி வழியாக மதுரை வந்த அனில்ராஜ்( 35) என்பவருக்கு தொண்டை வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுள்ளார். தொண்டை வலி குணமாகாத நிலையில்  அரசு ராஜாஜி மருத்துவமனையில் தனி வார்டில் அனில்ராஜ் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவருக்கு பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. பரிசோதனையைத் தொடர்ந்தே தொண்டை வலிக்கான காரணம் தெரியவருமென மருத்துவமனை முதல்வர் ஜெ.சங்குமணி தெரிவித்துள்ளார்.