சென்னை,டிச.4- காவல்துறை பணிக்கான உடல் தகுதித் தேர்வில் திருநங்கைகள் 4 பேரையும் அனு மதிக்கும் உத்தரவை 5ஆம் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால், ஒட்டுமொத்த தேர்வு நடைமுறைக்கும் தடை விதிக்க நேரி டும் எனத் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தைச் சென்னை உயர் நீதி மன்றம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் திருநங்கைகள் தீபிகா, ஆராதனா, தேன்மொழி, சாரதா ஆகியோர் தொடுத்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாகுபாடுகளைக் களை யவே திருநங்கைகளை உடல் தகுதித் தேர்வில் கலந்து கொள்ள அனுமதியளித்து உத்தரவிட்டதாகவும், இதை 5 ஆம் தேதிக் குள் அமல்படுத்தத் தவறும்பட்சத்தில் காவ லர் தேர்வு நடைமுறை முழுமைக்கும் தடை விதிக்க நேரிடும் என்று உயர்நீதிமன்றம் எச்சரித்தது.