tamilnadu

img

அகற்றப்படாத மின்கம்பங்கள்!

சென்னை,ஜூலை 20- தமிழக சட்டப்பேரவையில் சனிக்கிழமை யன்று (ஜூலை20) டெல்டா மாவட்ட விவசாயிகள் விரைவில் உழவு பணிகளை மேற்கொள்ள இருப்ப தால், கஜா புயலின்போது சரிந்து விவசாய நிலங்க ளில் கிடக்கும் மின்கம்பங்களை அகற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று திருத்துறைப் பூண்டி தொகுதி திமுக உறுப்பினர் ஆடலரசன் வலியுறுத்தினார்.  இதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கமணி,  “கஜா புயலால் 5 மாவட்டங்களில் 3 லட்சத்து 31  ஆயிரம் மின் கம்பங்கள் விழுந்தன. அதற்கு மாற்றாக  கம்பங்கள் புதிய மின் கம்பங்கள் அமைப்பது  மற்றும் மின் இணைப்புகள் வழங்க முதலில் கவ னம் செலுத்தப்பட்டதால், சரிந்த கம்பங்களை அகற்ற கால தாமதம் ஏற்பட்டுள்ளது. அகற்றப்படா மல் வயல் வெளிகளில் உள்ள மின்கம்பங்கள் ஒரு மாதத்தில் அகற்றப்பட்டு  விவசாயிகள் பயிர்  செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.