ஐ.டி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கோரிக்கை
சென்னை, நவ. 7- மென்பொருள் நிறுவனங்கள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்வதை, சம்பந்தப்பட்ட நிறுவ னங்கள் தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டி ருக்கிறார். இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் சென்னை நந்தம்பாக் கத்தில் சர்வதேச தகவல் தொழில் நுட்பத் துறை தொடர்பான 2 நாள் சர்வதேச கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெறுகிறது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வியாழனன்று(நவ.7) தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அதிநவீன கண்டுபிடிப்புகள், பயன்பாட்டில் உள்ள அதிநவீன தொழில்நுட்பத்தில் இயங்கும் சாதனங்கள், மென்பொருட்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.
இந்த நிகழ்வில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் உரு வாக்கப்பட்டுள்ள, தகவல்தொழில் நுட்பத் திட்டங்களை, முதல மைச்சர் தொடங்கி வைத்தார். எளிய முறையில் வருகைப் பதி வேடுகளை கையாளும் வகை யில், முக அடையாளத்தை கொண்டு செயல்படும், மின் வருகைப்பதிவேடு உருவாக்கப் பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் இந்த முக அடையாள வருகைப்பதிவேடு திட்டத்தை யும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். துவக்க நிலையில் சென்னை மாநகரில் இரண்டு பள்ளிகளில் இவ்வகை வரு கைப்பதிவேடு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உருவாக்கியுள்ள உழ வன் செயலி வாயிலாக பதி வேற்றப்பட்ட புகைப்படங்களை பகுப்பாய்வு செய்து பயிர் நோய்கள் மற்றும் பூச்சிகளை கண்டறிந்து அதற்கான தீர்வு களை வழங்கும் வசதி உரு வாக்கப்பட்டுள்ளது. கேமரா வசதி கொண்ட கைபேசி மூலம் படங்களை உழவன் செயலி மூலம் அனுப்பி விவசாயிகளே தீர்வுகளை பெறலாம். இதையடுத்து, இருப்பிடச் சான்று, சாதிச்சான்று, பிறப்பு-இறப்பு, பட்டா மாறுதல் உள்ளிட்ட அரசு சேவைகளை, இ-சேவை மையம் மூலம் பெறுவதற்கான வழிமுறைகளை எளிதில் அறிந்து, புரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் YOUTUBE சேனலை, முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அரசு சேவைகளை பெறும் நடைமுறைகளை மக்கள் எளி தில் புரிந்து கொள்ளும் வகை யில் வீடியோ வடிவிலான தகவல் களை ‘யூடியூப்’ சேனல் மூலம் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, முத லமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், மூன்று புரிந்து ணர்வு ஒப்பந்தங்கள் கையெ ழுத்தானது. சர்வதேச தகவல் தொழில் நுட்ப கருத்தரங்கில் உரை யாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாட்டின், சாஸ் கேப்பிடல் ஆப் இந்தியா என்று கூறும் அளவிற்கு, சென்னையில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங் கள் தொடங்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் கூறினார். கடந்த நிதியாண்டில், ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 899 கோடி ரூபாய்க்கு மென்பொருள் ஏற்றுமதி நடைபெற்றிருப்பதாக வும், இதன்மூலம், 6 லட்சத்து 50 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உரு வாக்கப்பட்டிருப்பதாகவும் குறிப் பிட்ட முதலமைச்சர், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமல், அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உரு வாக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.