tamilnadu

img

டிச. 2க்குள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை, நவ. 18- டிசம்பர் 2ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வெளி யிடப்படும் என உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பான வழக்கு  உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. அப்போது அனைத்து பணிகளும் முடிந்து உள்ளாட்சித்  தேர்தல் அறிவிப்பாணை டிசம்பர் 2ஆம்  தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான விவ ரங்களை டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் அறிக்கை யாக தாக்கல் செய்வதாகவும் மாநில தேர்தல்  ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித் தது. இந்நிலையில், உச்சநீதிமன்ற வளா கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வழக்கறிஞரும் எம்பியுமான வில்சன், புதிதாக  பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கும் எல்லை மறுவரையறை செய்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என நீதிபதிகள் கூறியிருப்பதாக தெரிவித்தார்.  

இதனிடையே உள்ளாட்சித் தேர்தல் முன்  னேற்பாடுகள் தொடர்பாக மாநில தேர்தல்  ஆணையர் பழனிசாமி, 10 மாவட்டங்களை சேர்ந்த ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதன்படி வரும் 20ஆம் தேதி  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில், காஞ்சி புரம், திருவள்ளூர், வேலூர் மாவட்ட ஆட்சி யர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்துகிறார். அதே போல் 22ஆம் தேதி திருச்சி மாவட்ட  ஆட்சியரகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பெரம்பலூர், கரூர், திருச்சி, அரியலூர் மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் பங்கேற்  கின்றனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் 23ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். ஏற்கனவே 10 தென் மாவட்டங்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.