சென்னை, ஜூலை 17- தமிழக சட்டப்பேரவை யில் புதனன்று(ஜூலை 17) வருவாய்த் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக உறுப்பினர் மா. சுப்பிரமணியன்,“சென்னை உள்ளிட்ட தமிழகம் முழு வதும் உள்ள இ-சேவை மையங்களில் அதிகம் பெண்களே பணியாற்று கிறார்கள். மிக கடினமான சூழ்நிலையில் பணியாற்றும் அந்த ஊழியர்களுக்கு ஓய் வறைக்கூட கிடையாது. பணி நிரந்தரம், சம்பளம் கேட்டு கடந்த மே மாதம் போராட்டம் நடத்தி அரசுக்கு தங்களின் கோரிக்கையை உணர்த்தி னர். சம்பளம் கொடுக்கவும், பேப்பர், டோனர் வாங்கவும் பணம் இல்லாமல் பல மையங்கள் மூடப்பட்டுள் ளது. உதாரணத்திற்கு, தனது சைதாப்பேட்டை தொகு திக்குட்பட்ட மாந்தோப்பு பள்ளி, கிழக்கு ஜோன்ஸ் சாலைகளில் உள்ள இரண்டு மையங்களும் சம்பளம் இல்லாமல் மூடப்பட்டுள் ளது. இதனால் சான்றுகள் வாங்க முடியாமல் மாண வர்கள் திண்டாடினர்” என்றார். அப்போது குறுக்கிட்ட வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார்,“எந்த பகுதியி லும் இ-சேவை மையங்கள் மூடப்படவில்லை. மாண வர்களுக்கு அந்த அந்த பள்ளிகளிலேயே சான்று வழங்கப்படுகிறது. இத னால், பொது மக்கள் சான்று பெறுவதில் எந்த சிரமமும் இல்லை. சம்பள உயர்வு குறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். பரிசீலித்து வருகிறார்” என்றார். தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண் டன்,“மாநிலம் முழுவதும் 12,649 இ-சேவை மையங் கள் செயல்பட்டு வருகிறது. சான்றிதழ் கேட்டு மாண வர்கள் அதிகமாக ஒரே நேரத்தில் குவிந்துவிடு கிறார்கள். இதனால், சர்வர் முடங்கிவிடுகிறது. பின்னர் அதை சரி செய்து மீண்டும் சான்றுகள் வழங்கப்படு கிறது. எந்த மையத்திலும் சம்பள பிரச்சனை இல்லை. போக்குவரத்து துறையில் எப்படி வருமானம் இல்லா மல் பேருந்துகள் நிறுத்தப் படுகிறதோ, அதைப்போல், வருமானமே இல்லா மையங் களை மூடிவிட்டு அருகாமை யிலுள்ள மையத்துடன் ஒப்ப டைத்து வருகிறோம் என்று ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார். மீண்டும் பதில் அளித்த அமைச்சர் உதயகுமார், “குற் றம் பார்ப்பின் சுற்றம் இல்லை. எனவே, அங்கொன்றும், இங் கொன்றுமாக மூடியிருக்க லாம். அது சரிசெய்யப்படும் என்று சமாளித்தார்.