சென்னை,ஆக.31- ஆவின் பால் விலை உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த முனிகிருஷ்ணன் என் பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு அறிவிப்பின்படி ஆவின் பால் விற்பனை விலை லிட்ட ருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட் டுள்ளது. ஆவின் பால் விலை உயர்வால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளதால், தமிழக அர சின் அறிவிப்பாணையை ரத்து செய்ய உத்தரவிட வேண் டும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது. இந்த வழக்கு வரும் திங்க ளன்று நீதிபதிகள் சத்யநாரா யணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.