சென்னை,அக்.6 ‘நீட்’ தேர்வில் மேலும் 2 மாணவர்கள் ஆள்மாறா ட்டம் செய்து தேர்வு எழுதியது சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறா ட்டம் செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படு த்தியது. இதில் மாணவர் உதித் சூர்யா ஆள்மாறா ட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது கண்டுபிடிக்க ப்பட்டது. இதையடுத்து மாணவர் உதித்சூர்யா அவரது தந்தை வெங்கடே சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இது தவிர, தில்லுமுல்லு செய்து மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்கள் இர்பான், பிரவீன், ராகுல் ஆகியோரும் சிக்கினார்கள். இவர்கள் மதிப்பெண்களை திருத்தி மருத்துவ படிப்பில் சேர்ந்ததாக கூறப்பட்டது. இவர்களுடைய தந்தையர்க ளும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் மாணவர்கள் பிரவீன், ராகுல் டேவிஸ் ஆகியோரும் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவர் பிரவீன் ஆவடி யில் உள்ள ஒரு கல்லூரியில் நீட் தேர்வு எழுதினார். அதே நேரத்தில் அவர் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து ஒருவர் டெல்லி பிதம்பிபுரா பள்ளியில் நீட் தேர்வு எழுதினார். நீட் தேர்வில் பிரவீன் 720-க்கு 130 மார்க் வாங்கினார். இவருக்கு பதிலாக டெல்லியில் தேர்வு எழுதிய ஆள்மாறாட்ட நபர் 348 மதிப்பெண் பெற்றார். இதுபோல் மற்றொரு மாணவரான ராகுல் டேவிஸ், தமிழ்நாட்டில் கோவை கருமத்தப்பட்டி என்ஜினீ யரிங் கல்லூரியில் நீட் தேர்வு எழுதினார். இதில் இவருக்கு 125 மதிப்பெண் கிடைத்தது. இதே நேரத்தில் அவரு டைய பெயரில் ஆள்மாறா ட்டம் செய்து லக்னோவில் உள்ள தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுதியவர் 306 மதிப்பெண் பெற்றார். நீட் தேர்வு எழுதிய பிரவீன், ராகுல் டேவிஸ் இருவரும் வெற்றி பெறவில்லை.
அவர்களுடைய பெயரில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியவர்கள் முறையே 348, 306 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றனர். அதைக் கொண்டு பிரவீன், ராகுல் ஆகியோர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தனர். விண்ணப்பம் செய்வ தில் இருந்தே ராகுல், பிர வீன் முறைகேடு தொடங்கி உள்ளது. பிரவீன் விண்ணப்ப மனுவில் பிறந்த தேதி 1998 ஜூலை 27 என்று சரியாக உள்ளது. இவருக்கு பதிலாக எழுதியவருக்கும் இதே பிறந்த தேதி உள்ளது. ஆனால் தனது தந்தை பெயரின் இன்சியல், தாய் பெயர் ஆகியவற்றை சிறிது மாற்றி எழுதியுள்ளார். இதுபோல் ராகுலும்தான் எழுதிய நீட் தேர்வு விண்ணப்பத்தில் தந்தை பெயரை ஒருவித மாகவும், தனக்கு பதிலாக எழுதியவரிடம் வேறு விதமாகவும், தாய் பெயரை சிறிது மாற்றம் செய்து எழுதியுள்ளார். வீட்டு விலாசங்களையும் 2 மாண வர்களும் மாற்றி எழுதி தில்லு முல்லு செய்து உள்ள அதிர்ச்சி தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்து ள்ளது.