tamilnadu

img

சர்வதேச தூண்டில் மீன்பிடி போட்டியில் இந்தியா பங்கேற்பு

சென்னை, ஆக. 7- ரஷ்ய நாட்டு அரசு அணு மின்  உற்பத்தி நிறுவனமான ரொசாட்  டம் சார்பில், ரஷ்ய கடல் பகுதி யில், படகில் பயணித்தப்படியே தூண்டில் மூலம் மீன்பிடிக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன.  இப்போட்டிகள் ரஷ்யாவின் லெனின்கிரெட் அணு மின் நிலை யத்துக்கு அருகில் அரங்கேறின. இப்போட்டியில் பல்வேறு நாடு களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற னர். ரஷ்யாவில் இருந்து 20 அமெச்  சூர் வீரர்களும், ரொசாட்டம் அணு  மின் உற்பத்தி கழகம் கால்பதித் துள்ள மற்ற உலக நாடுகளின் சார்பில் சில வீரர்களும் இந்தப் போட்டிகளில் பங்கேற்றனர். ஹங்கேரி, எகிப்து, இந்தியா (கூடங்குளம் அணு மின் உற் பத்தி நிலையம்), வங்கதேசம் மற்றும் துருக்கி போன்ற நாடு களும் இதில் அடங்கும்.  

அணு மின் உற்பத்தி நிலையங்  கள் தாவரங்களுக்கும், விலங்கி னங்களுக்கும் கேடு பயக்கும் என  பல கருத்துகள் பரப்பப்பட்டா லும், அவை உண்மையல்ல. அணு உலையை ஒட்டிய உயி ரின வாழ்க்கையும் பாதுகாப்பான வைதான் என்பதை நிரூபிக்கவே  இந்தப் போட்டிகள் நடத்தப்படு கின்றன.  சர்வதேச தூண்டில் மீன்பிடி  விளையாட்டுக்கான இந்திய சங்கத்தின் துணைத் தலைவரும்,  சிறந்த மீன்பிடி வீரருமான  டெரிக் டிசோசா இந்தப் போட்டிகள் குறித்து பேசுகையில், அணு மின் சக்தி பாதுகாப்பானதுதான் என்பதை நேரில் பார்த்து உணர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு  கிடைத்தது எனத் தெரிவித்தார். மீன்பிடி விளையாட்டுப் போட்டிக்கான இந்திய சங்கத்தின்  தலைவர் சந்தோஷ் கோல்வாங்  கர் பேசுகையில், “பொழுது போக்காக தூண்டில் போட்டு  மீன்பிடிப்பதிலேயே, பல நாடுகள்  நல்ல லாபம் பெறுகின்றன. இதில்  நான் பெற்ற அனுபவத்தை வைத்து, இந்தியாவிலும் தூண் டில் மூலம் மீன்பிடிக்கும் சர்வ தேசப் போட்டிகளை நடத்த முயற்சி செய்வோம் எனத் தெரி வித்தார்.