tamilnadu

img

44 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

இந்தோனேஷியாவில் 44 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குகை ஓவியங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள கிரிஃப்த் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், இந்தோனேஷியாவின் தெற்கு சுலாவெசியில் உள்ள குகை ஒன்றில் கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த குகையில் தற்போது, இந்த மிகவும் பழமையானதாக கருதப்படும் குகை ஓவியங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஓவியங்களை, 44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குகையில் வாழ்ந்த மனிதர்கள் வரைந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மனித உடல் பாகங்கள், விலங்குகளில் தலைகள், எருமை வேட்டை, பன்றி உள்ளிட்ட ஓவியங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.