இந்தூர், ஜூன் 16- ரயில்களில் பயணிகளின் தலை மற்றும் கால்களுக்கு மசாஜ் சேவை அளிக்கும் திட்டத்தை மேற்கு ரயில்வே சனிக்கிழமை திரும்பப் பெற்றுக் கொண்டது. மசாஜ் சேவை திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி யதையடுத்து இந்த முடிவை மேற்கு ரயில்வே எடுத்துள்ளது. ரயில்கள் மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், ரயிலில் செல்லும் பயணிகளுக்கு மசாஜ் சேவை அளிக்கும் திட்டம் கொண்டு வரப்பட இருப்பதாக மேற்கு ரயில்வே அண்மையில் தெரிவித்திருந்தது. அதாவது, மேற்கு ரயில்வேயின் ரத்லம் பிரி வுக்கு உட்பட்ட இந்தூரில் இருந்து இயக்கப் படும் ரயில்களில் மசாஜ் சேவை தொடங்கப் பட இருப்பதாக குறிப்பிட்டிருந்தது. இது தொடர்பான செய்திகள் வெளியானதும், மேற்கு ரயில்வேயின் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. குறிப்பாக, இந்தூர் தொகுதி பாஜக எம்.பி. சங்கர் லால்வானி, மக்களவை முன்னாள் தலைவர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் தங்களது ஆட்சேபத்தை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மேற்கு ரயில்வேயின் ரத்லம் பிரிவு மேலாளர் ஆர்.என். சங்கர், ரயில்களில் பயணிகளின் தலை, கால்கள் ஆகிய உடல் பாகங்களுக்கு மட்டுமே மசாஜ் சேவை அளிக்கப்பட இருக்கிறது; உடல்பாகம் முழுமைக்கும் மசாஜ் சேவை அளிக்கப்பட மாட்டாது என்று விளக்கமளித்தார். இந்நிலையில், ரயில்களில் பயணிகளின் தலை, கால்களுக்கு மசாஜ் சேவை அளிக்கும் திட்டத்தை மேற்கு ரயில்வே சனிக்கிழமை திரும்பப் பெற்றுக்கொண்டது. இதுகுறித்து மேற்கு ரயில்வேயின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரவீந்தர் பாஹர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மேற்கு ரயில்வேயின் ரத்லம் பிரிவுக்குட்பட்ட இந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக் கப்படும் ரயில்களில் செல்லும் பயணிகளின் தலை, கால்களுக்கு மசாஜ் சேவை அளிப்பதை அறிமுகப்படுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தத் திட்டத்தை அறிமுகப் படுத்துவது தொடர்பான அறிவிப்பு வெளி வந்ததும், மேற்கு ரயில்வேயின் மூத்த அதி காரிகளால், அதை வாபஸ் பெறுவது என்று முடிவு செய்யப்பட்டது’ எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.