பிலிப்பைன்ஸில் நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பிலிப்பைன்ஸின் இரண்டாவது பெரிய தீவுப் பகுதியான மின்டனாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 22 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.8 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிலிப்பைன்ஸின் வடகிழக்கு மாகாணமான கோடாபடோவில் திங்கட்கிழமை 6.6 ரிக்டர் நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக துலுனான் நகரில் 7 பேர் பலியாகினர். இந்நிலையில் மீண்டும் பிலிப்பைன்ஸில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2 வாரங்களில் மிண்டானாவை மையமாக கொண்டு 3-வது முறையாக நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.