வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்தது
புதுதில்லி, செப்.14- ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், இந்தியாவின் ஏற்றுமதி 1.53 சதவிகிதமும் இறக்குமதி 5.68 சதவிகிதமும் குறைந்துள்ளது. இதனால், ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறையானது 1,345 கோடி டாலராக (13.45 பில்லி யன் டாலர்) அதிகரித்துள்ளது. மத்திய அரசு இது தொடர்பாக வெள்ளிக்கிழமையன்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில், மேலும் கூறப்பட்டி ருப்பதாவது: 2019 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையான காலத்தில் ஏற்று மதி 1.53 சதவிகிதம் சரிந்து 13,354 கோடி டாலராக உள்ளது. இறக்குமதி 5.68 சத விகிதம் குறைந்து 20,639 கோடி டாலராக பின்தங்கியுள்ளது.
2019 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஏற்றுமதி 6.05 சதவிகிதம் குறைந்து 2,613 கோடி டாலராகவும்; இறக்குமதி 13.45 சதவிகிதம் சறுக்கி 3,958 கோடி டாலராகவும் உள்ளது. இதன்மூலம் ஆகஸ்ட் மாதத்தில் வர்த்தக பற்றாக் குறையானது 1,345 கோடி டாலராக உயர்ந்துள்ளது 2019 ஜூலையில், வர்த்தகப் பற்றாக் குறை 1,343 கோடி டாலராக இருந்த நிலையில், சற்று அதிகரித்துள்ளது. இதுவே 2018 ஆகஸ்ட் மாதத்தில், 1,792 கோடி டாலராக வர்த்தகப் பற்றாக் குறை இருந்துள்ளது. இரும்புத் தாது, மின் சாதனங்கள், நறுமணம் மற்றும் கடல் உணவுப் பொருள்கள் போன்றவற்றின் ஏற்றுமதி வளர்ச்சி கண்டுள்ளது. நவரத்தினங்கள் ஆபரணங்கள், பொறியியல் பொருட் கள், பெட்ரோலிய தயாரிப்புகள் முத லானவற்றின் ஏற்றுமதி குறைந்துள்ளது.
தங்கம் இறக்குமதி 62.49 சதவிகி தம் வீழ்ச்சியடைந்து 136 கோடி டால ராக இருந்துள்ளது. 2019 ஜூலையில் தங்கம் இறக்குமதி 42.2 சதவிகிதம் குறைந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பி டப்பட்டு உள்ளது. நாட்டின் ஆகஸ்ட் மாத 13.45 பில்லி யன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறைக்கு, தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் வர்த்த கத்தில் ஏற்பட்ட பாதிப்பே காரணம் என்று கூறப்படுகிறது. இந்தியாவைப் போல சீனாவின் ஏற்றுமதி அளவும் 1 சதவிகிதம் குறைந் துள்ளது. இறக்குமதி 5.6 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனால், அமெரிக்கா உடனான மாபெரும் வர்த்தகப் போரை யும் தாண்டி சீனா வெறும் 1 சத விகித ஏற்றுமதி பாதிப்பையே சந்தித்தி ருக்கிறது என்பது, அந்நாட்டு வர்த்த கம் ஸ்திரத்தன்மையுடன் இருப்ப தையே காட்டுவதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.