சென்னை, செப்.16- கடந்த ஒரு வார காலமாக குறைந்து வந்த தங்கம் விலை செப்டம்பர் 16 திங்களன்று ஒரே நாளில் சவரனுக்கு 336 ரூபாய் அதிகரித்துள் ளது.ஆகஸ்ட் மாதத் தொடக்கம் முதல் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை பல்வேறு புதிய உச்சங்களையும் எட்டி விற் பனையானது. வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் 30 ஆயிரம் ரூபாயையும் கடந்து விற்பனையானது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக படிப்படியாக குறைந்த தங்கம் விலை, ஒருசவரன் 29 ஆயிரம் ரூபாய்க்கும் கீழே குறைந்தது. இந்நிலையில் திங்களன்று ஒரே நாளில் தங்கம் விலை சவர னுக்கு 336 ரூபாய் அதிகரித்து மீண்டும் 29 ஆயிரம் ரூபாயை கடந்துள் ளது. அதன்படி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 29 ஆயி ரத்து 8 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 42 ரூபாய் அதிகரித்து, மூவாயிரத்து 626 ரூபாய்க்கு விற்பனை செய்யப் படுகிறது. அதே போல் வெள்ளி விலையும் ஒரே நாளில் கிராமுக்கு 1 ரூபாய் 70 காசுகள் வரை உயர்ந்துள்ளது.