tamilnadu

img

அசாம் வெள்ளத்தில் சிக்கி 61 பேர் பலி

அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 61 பேர்  உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து மாநிலத்தின் பல பகுதிகளில்  கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 30 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகள் மற்றும் கட்டிடங்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வேறு இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. அசாமில் இதுவரை 61 பேர் பலியாகி உள்ளனர்.34 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.