ஒகேனக்கல்,ஆக.08- கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை யால் அங்குள்ள அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் பாது காப்பு கருதி கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்திற்கு வரக்கூடிய உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளது. தற்போது கர்நாடக அணைகளில் இருந்து சுமார் 1 லட் சத்து 23 ஆயிரத்து கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. சனிக்கிழ மையன்று ஒகேனக்கல்லுக்கு 7 ஆயிரம் கனஅடி நீர் அதிகரித்து, 49 ஆயிரம் கனஅடி யாக நீர்வரத்து உயர்ந்துள்ளது. நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி தண்ணீரில் மூழ்கி காணப்படுகிறது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிரித்துள்ளது.