அரியலூர், ஆக.2- கொரோனா தொற்று பரவுதல் காரணமாக 5-வது வாரமாக ஞாயிற்று க்கிழமை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்ப டுகிறது. ஆடிப்பெருக்கு விழா அன்று அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடக் கரையோர சுற்றுவட்டாரத்தில் இருந்து புதுமணத் தம்பதிகள் மற்றும் பொது மக்கள் பேருந்துகளில் வந்து ஆற்றங்கரையில் வழிபாடு நடத்தி ஆடிப்பெ ருக்கை கொண்டாடுவது வழக்கம். கொள்ளிடம் ஆற்றங்கரை கிராமங்களான அருள்மொழி, மதனத்தூர், வாழைக்குறிச்சி, அடிக்காமலை, மேலக்குடிகாடு, தென்கச்சிபெரு மாள்நத்தம், கீழேகுடிகாடு, அண்ணங்காரம்பேட்டை, கோடாலிகருப்பூர் ஆகிய பகுதிகளில் கிராம மக்கள் மற்றும் புதுமண தம்பதியர் காவிரி தாய்க்கு சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் பேருந்துகள் இயக்கம் முற்றிலும் நிறுத்தப்பட்டதாலும், ஆற்றங்கரையில் பொதுமக்கள் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டதாலும், திருவிழா கூட்டம் போல் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்பட்டது.