மும்பை, ஆக. 6 - மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டை யில் 35 அடியில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வெண்கல உருவச்சிலை அமைக்கப்பட்டது. இதனை கடந்த ஆண்டு டிசம்பர் 4 அன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இந்நிலையில், திங்களன்று சிந்துதுர்க் பகுதியில் பெய்த சாதாரண மழைக்கு சிவாஜி சிலை கீழே விழுந்து நொறுங்கியது. 35 அடி உயர சத்ரபதி சிவாஜியின் சிலை, தலை, கை மற்றும் கால் எனத் தனித் தனியாக முழு சிலையும் விழுந்து நொறுங்கிய சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்ற முதற்கட்ட தகவல் வெளியாகியுள் ளது. இருப்பினும் இந்த சிலை திறக்கப் பட்டு 8 மாதத்தில் சிலை சேதமடைந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.