பாஜக கூட்டணி கட்சியான மதச்சாற்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா வின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா 300க்கும் மேற்பட்ட பெண்களை பாலி யல் பலாத்காரம் செய்த வழக்கில் கர்நாடகா எஸ்ஐடி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரஜ் வால் ரேவண்ணாவால் பலாத்காரம் செய்யப்பட்ட அவரது வீட்டு பணிப் பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில் பிரஜ்வால், அவரது தந்தை ரேவண்ணா மற்றும் தாய் செல்வி பவானி ஆகிய 3 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய் யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கடந்த மே 3 அன்று கைதான ரேவண்ணா தீவிர விசாரணைக்கு பிறகு ஜாமீ னில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஜெர்மனியில் இருந்து வந்த பிரஜ்வாலிடம் இதுதொடர்பாக கூட்டு விசாரணை நடத்தப்பட்டுவரும் நிலையில், ஜூன் 1 அன்று வீட்டி லேயே விசாரணை நடத்த உள்ளோம்; அதனால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வீட்டிலேயே இருக்குமாறு செல்வி பவானிக்கு எஸ்ஐடி போலீசார் நோட்டீஸ் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் விசா ரணை நாளான சனியன்று பவானி வீட்டிலேயே இல்லை. அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால், மாலை 5 மணி வரை அதிகாரிகள் வீட்டிலேயே காத்திருந்த நிலையில், எஸ்ஐடி அதிகாரிகள் 5:30 மணிக்கு மேல் பவானியின் வீட்டிலிருந்து வெளியேறினர்.
இதுதொடர்பாக பவானியின் வழக்கறிஞர் சுமா, “செல்வி பவானி விரைவில் விசாரணைக்கு ஒத்து ழைப்பார். தற்போது அவர் முழங் கால் அறுவை சிகிச்சை மற்றும் அவ ரது சகோதரரின் மரணம் தொடர்பான அழுத்தத்தில் இருந்து மீண்டு வருகிறார். அதனால் விரைவில் விசா ரணைக்கு ஆஜராவர். ஆனால் தற் போது பவானி எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை” எனக் கூறி னார்.
செல்வி பவானி ஆஜராகாதற்கு காரணங்களை அடுக்கிய அவரது வழக்கறிஞர் கடைசியாக,”எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளதால், செல்வி பவானி தலைமறைவாகி இருப்பது உறுதி யாகிவிட்டது. இதனால் செல்வி பவா னியை கைது செய்ய கர்நாடகா எஸ்ஐடி போலீசார் அடுத்தகட்ட நட வடிக்கையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட பின்பே தலைமறைவு
“பணிப்பெண் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக உங்கள் வீட்டிற்கு ஜூன் 1 அன்று விசாரணைக்கு வருவோம்” என பவானிக்கு கடந்த வாரம் கர்நாடகா எஸ்ஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். விசா ரணை முடிவில் தனது கணவர் ரேவண்ணா போல தானும் கைது செய்யப்படலாம் என்று உணர்ந்த செல்வி பவானி மே 31 அன்று பெங்க ளூரு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளு படி செய்யப்பட்டதால் செல்வி பவானி தலைமறைவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.