states

img

ஒரே நாளில் 18327 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் உயர்ந்து வருகிறது.  இந்நிலையில் புதிதாக 18,327 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,11,92,088 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,327 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,11,92,088 ஆக அதிகரித்துள்ளது. 
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 14,234பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து மொத்தம் 1,08,54,128 பேர் குணமடைந்தனர். 
இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 108 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,57,656 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய சூழலில் 1,80,304 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
தற்போது வரை நாடு முழுவதும் 1,94,97,704 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

;