தில்லி முகர்ஜி நகர் பகுதியில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 4 மாணவர்கள் காயமடைந்தனர்.
தில்லி முகர்ஜி நகர் பகுதியில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் இன்று மதியம் 12.30 மணியளவில் திடீரென மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. அப்போது பயிற்சி மையத்திலிருந்து படிக்கட்டு வழியாக வெளியேற முடியாத நிலையில், அங்கிருந்த மாணவர்கள் மாடியில் இருந்து ஜன்னல் வழியாக கயிறு மூலம் கீழே இறங்கினர். இதில் 4 மாணவர்கள் காயமைந்தனர்.