states

img

இந்தியா முழுவதும் 24 மணி நேரத்தில் 16838 பேருக்கு கொரோனா

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 16838 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 16,838 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக நாட்டில் அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,11,73,761 ஆக அதிகரித்தது. அதே காலகட்டத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 113 போ் உயிரிழந்தனா். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,57,548 போ் உயிரிழந்தனா். கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,08,39,894 போ் குணமடைந்தனா்.  நாட்டில் தற்போது 1,76,319 போ் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) புள்ளிவிவரப்படி வியாழக்கிழமை வரையிலும் நாடு முழுவதும் 21 கோடியே 99  லட்சத்து 40 ஆயிரத்து 742 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் வியாழக்கிழமை மட்டும் 7,61,834 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

;