states

55 மாதமாக ஊதியம் இல்லாத ரேசன் கடை ஊழியர்கள் கைது: சிபிஎம் கண்டனம்

புதுச்சேரி, மார்ச்.19- புதுச்சேரியில் ரேசன் கடை ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 55 மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியிலுள்ள ரேசன் கடைகளில் 580க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர். கடந்த 55 மாதங்களாக இந்த ஊழி யர்களுக்கு சம்பளம் வழங்கப்பட வில்லை. இங்கு பணிபுரியும் ஊழியர்கள் அறவழியில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஊழியர்களோடு அரசும பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் சம்பளம் வழங்கப்படும் என்று உறுதியளித்தது. இந்த உறுதிமொழியை தொடர்ந்து குடிமைப்பொருள் வழங்கல் துறை மீறி வருவதை கண்டிக்கி றோம். இந்நிலையில், ரேசன் கடை ஊழியர்கள் முதல்வர் ரங்கசாமியின் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது காவல்துறையினர் அராஜகமாக கைது செய்ததை  வன்மையாக கண்டிக்கிறோம். மூடப்பட்டுள்ள ரேசன் கடைகளை திறக்க வேண்டும் ஏழை-எளிய மக்க ளுக்கு அனைத்து அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலை யில் வழங்க வேண்டும். ஊழியர் களுக்கு வழங்க வேண்டிய சம்பள நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். இவ்வாறு ராஜாங்கம் தெரி வித்துள்ளார்.