states

img

பீகாரில் மதவன்முறையை தூண்டும் ஒன்றிய பாஜக அமைச்சர்

ஒன்றிய பாஜக அமைச்  சர் கிரிராஜ் சிங், “இந்து  மக்கள் யாரும் ஹலால்  செய்யப்பட்ட இறைச்சியை உண்ண வேண்டாம்” என அடுத்த  கட்ட சர்ச்சையை கிளப்பியுள்  ளார். பீகார் மாநிலம் பெகு சராய் பகுதியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,”மதத்தின் மீது பற்றுக் கொண்டிருக்கும் இஸ்  லாமியர்களை நான் மிகவும் மதிக்கிறேன். ஹலால் செய் யப்பட்ட இறைச்சியை மட்  டுமே உட்கொள்ளும் இஸ்லா மியர்களை நான் பாராட்டு கிறேன். அதே போல இந்துக்  களும் புரிந்துகொள்ள வேண்  டும். இந்துக்களும் இதே போன்ற  உறுதிப்பாட்டை வெளிப் படுத்த வேண்டும். அதாவது இந்து மக்கள் ஹலால் செய் யப்பட்ட இறைச்சியை உண்ப தன் மூலம் தங்களை சீர ழித்துக் கொள்ளக்கூடாது. அவர்கள் எப்போதும் இந்து வழிபாடான ஒரே முறை அறுக்  கப்பட்ட இறைச்சியை (ஜட்கா) மட்டும் உட்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

தேர்தல் நெருங்குவதால் சர்ச்சை கருத்துக்கள்

ஒன்றிய பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங் கடந்த சில நாட்க ளாக சர்ச்சைக்குரிய வகை யில் பேசி வருவது வாடிக்கை யாகிவிட்டது. கடந்த நவம்பர்  மாதம் உத்தரப்பிரதேசம் போல பீகார் மாநிலத்தில்  ஹலால் செய்யப்பட்ட பொருட்  களை தடை செய்யுமாறு கூறி னார். டிசம்பர் முதல் வாரத் தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது இந்துக்கள் ஹலால் செய்யப் பட்ட இறைச்சியை உண்பதன் மூலம் தங்களை சீரழித்துக் கொள்ளக்கூடாது என பீகா ரில் மதவன்முறையை தூண் டும் வகையில் பேசியுள்ளார்.

மக்களவை தேர்தல் நெரு ங்கி வருவதால் பீகார் மாநி லத்தில் மதம் சார்ந்த குழப்  பத்தை ஏற்படுத்தி வன்முறை யை கட்டவிழ்த்து விட ஒன் றிய அமைச்சர் கிரிராஜ் சிங்  மூலம் பாஜக காய் நகர்த்தி வரு வது போன்ற அரசியல் கண் ணோட்டம் பிரதிபலித்து வரு கிறது.