states

img

பீகார் : நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு வெற்றி

பீகார் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 160 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் நிதிஷ் குமார் வெற்றி பெற்றார்.

பீகாரில், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார், காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரிகள் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அம்மாநிலத்தின் 8-வது முதல்வராக கடந்த 10-ஆம் தேதி பதவியேற்று கொண்டார். பீகார் மாநில துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவியேற்று கொண்டார். இந்த நிலையில், பீகார் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மொத்தம் 243 எம்.எல்.ஏக்க்களில் 160 எம்.எல்.ஏக்கள் நிதிஷ் குமாருக்கு வாக்களித்தனர். இதன் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

;