states

img

கேரளத்தைப் பின்பற்றி மாநில மொழியில் தீர்ப்பு வழங்கிய தெலுங்கானா உயர் நீதிமன்றம்!

ஹைதராபாத், ஜூலை 1 - தெலுங்கானா உயர்நீதிமன்றம், முதல்முறையாக, மாநில மொழியான தெலுங்கில் தீர்ப்பு வழங்கி புதிய முன்னெடுப்பைத் துவக்கி வைத்துள் ளது. முன்னதாக 2023 பிப்ரவரியில், கேரள உயர் நீதிமன்றம் மலையா ளத்தில் தீர்ப்பு வழங்கி புதிய முன்னு தாரணத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனைப் பின்பற்றி, தெலுங்கானா உயர் நீதிமன்றமும், தற்போது மாநில மொழியான தெலுங்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதி மன்றங்களில், அனைத்து நடவடிக்கை களும் ஆங்கிலத்திலேயே மேற்கொள் ளப்படுகின்றன. வழக்கு தொடர்பான மனுக்கள் தாக்கல் செய்யப்படும் போது, ஆதார் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள், உள்ளூர் மொழியில் இருந்தாலும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு நீதிமன்றப் பதிவேட் டில் சமர்ப்பிக்கப்படுவதே நடை முறையாக இருந்து வருகிறது.  இந்நிலையில்தான், தாயின் சொத்தில் யாருக்கு உரிமை? என்று தொடரப்பட்டிருந்த மேல்முறையீட்டு வழக்கில், மூத்த நீதிபதி பி. நவீன் ராவ் மற்றும் நீதிபதி நாகேஷ் பீமபாகா  ஆகியோர் அடங்கிய அமர்வு 44 பக் கங்கள் கொண்ட தீர்ப்பை, தெலுங்கு மொழியில் வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் நீதிபதி பி. நவீன் ராவ் மற்றும் நீதிபதி நாகேஷ் பீமபாகா ஆகி யோர் அடங்கிய அமர்வு, புதிய வர லாற்றைத் துவக்கி வைத்து உள்ளது.  மனுதாரர் மற்றும் பொதுமக்களின் வசதிக்காகவே, தீர்ப்பு தெலுங்கில் வெளியிடப்பட்டதாக தெரிவித்தி ருக்கும் நீதிபதிகள், அதிகாரப்பூர்வ நட வடிக்கைகளுக்காக, 41 பக்கங்களில் ஆங்கிலத்திலும் அதே தீர்ப்பை வெளியிட்டுள்ளனர். தெலுங்கு மொழியிலான தீர்ப்பில், ஏதாவது சந்தேகங்கள் இருக்கும் பட்சத்தில், ஆங்கிலத்தில் உள்ள தீர்ப்பின் அடிப்படையில், நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்றும் அறி வுறுத்தி உள்ளனர். இந்த வழக்கில், இருதரப்பு வழக்க றிஞர்களும் தங்கள் தரப்பை நிரூபிக்க முன்வைத்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு களையும், இந்த நீதிபதிகள் அமர்வு, தெலுங்கில் மொழிபெயர்த்து அளித்துள்ளது.  கடந்த பிப்ரவரி மாதத்தில், கேரள உயர்நீதிமன்றம் மலையாளத்தில் தீர்ப்பு வழங்கி இருந்தது. கேரளாவுக்கு அடுத்தபடியாக உள்ளூர் மொழிகளில் தீர்ப்பு வழங்கி, இந்தப் பிரிவில், இரண் டாம் இடத்தை, தெலுங்கானா உயர் நீதிமன்றம் தன்வசம் ஆக்கியுள்ளது.