states

img

வாச்சாத்தி மக்களுக்கு துணைநின்ற தீக்கதிர்

திருநெல்வேலி, செப்.23- லெனின் துவக்கிய ‘இஸ்க்ரா’ (தீப்பொறி) ஏடு ரஷ்யப்புரட்சிக்கு உதவி யது. அதன் தமிழ்ப் பெயரைத் தாங்கி வரும் ‘தீக்கதிர்’ நாளிதழ் தனது ஐந்தாவது பதிப்பை திருநெல்வேலியில் துவங்கியிருப் பதற்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாக, கேரள முதல்வர் பினராயி விஜயனின் ஊடக செயலாளரும் தேசாபிமானி முன்னாள் ஆசி ரியருமான பி.எம்.மனோஜ் தெரிவித்தார். திருநெல்வேலியில் வெள்ளியன்று (செப்.22) நடைபெற்ற ‘தீக்கதிர்’ நாளிதழின் 5 ஆவது பதிப்பு துவக்க விழாவில் பங்கேற்ற மனோஜ் மேலும் கூறியதாவது: அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதுபோல, தமிழ்நா டும் கேரளாவும் கொள்கை நிலையில், மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்டதாக உள்ளன. கேரளத்தில் வெளியாகும் ‘தேசாபிமானி’யின் பிரதிநிதி என்கிற நிலையில், இந்த விழாவுக்கு ஒரு குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்பது போன்ற உணர்வு டன் வந்திருக்கிறேன். கேரளத்தில் ‘தேசாபி மானி’ மற்ற அனைத்து நாளிதழ்களின் போக்குகளுக்கு எதிராக நிலை கொண்டுள் ளது. ஊடகத்துறை நவீன அறிவியல் தொழில்நுட்பங்கள் மற்றும் ஊடக முதலாளி களின் கரங்களில் சிக்கி நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் சூழ்நிலையில் மாறு பட்டு நிற்கிறது தேசாபிமானி. அது போன்றதுதான் தீக்கதிரும்.  1992 இல் நான் வாசித்து அறிந்தது, தமிழ்நாட்டின் வாச்சாத்தியில் பழங்குடி மக்களுக்கு எதிராக அதிகார வர்க்கம் படு பயங்கரமாக வேட்டையாடிய செய்தி.  நடந்த வன்கொடுமைகளை வெளி உலகம் அறியச் செய்த ஒரே நாளிதழ் தீக்கதி ராகத்தான் இருந்தது. பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு நீதி கிடைப்பதற்காக உணர்வுப் பூர்வமாக செயல்பட்ட ஒரே அரசியல் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாகும்.   அதுபோலத்தான் கேரளத்தில். 1970 பிப்.18 அன்று, கேரளத்தின் வயநாடு பகுதி யில், வர்க்கீஸ் என்கிற நக்சலைட் மிக கொடூரமாக கொல்லப்பட்டார்.

அந்த அமைப்பு சிபிஎம்முடன் கடுமையாக முரண்பட்டு எதிர்த்த காலகட்டம் அது. சிபிஎம்மை கடுமையாக எதிர்த்து வந்த  வர்க்கீஸ் கொலைசெய்யப்பட்ட உடன் பெரும்பாலான பத்திரிகைகள் வர்க்கீசுக் கும் காவல்துறையினருக்கும் நடந்த மோத லில் அவர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டன. அதற்கு நேர்மாறாக வர்க்கீசை காவல்துறையினர் கட்டி இழுத்துச் சென்று கண்களை தோண்டி யெடுத்ததோடு சுட்டுக்கொன்றார்கள் என்று எழுதிய ஒரே பத்திரிகை தேசாபி மானி. ஆனால், அதற்கு ஆதரவாக நிற்க எந்த அரசியல் கட்சியோ பத்திரிகைகளோ முன்வரவில்லை.  1970 இல் நடந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதை வர்க்கீஸை துப்பாக்கி யால் சுட்டுக்கொன்ற போலீஸ்காரர் ராமச்சந்திரன் அதை வெளியே சொன்ன பிறகுதான் உலகம் நம்பியது. தேசாபிமானி வெளிப்படுத்திய அந்த உண்மை 28 ஆண்டுகள் உறங்கி கிடந்தது. அதுதான் கம்யூனிஸ்ட் பத்திரிகைகளின் வரலாறு. அத்தகைய வரலாறுதான் தீக்கதிருக்கும் உள்ளது. கேரளத்தில் ‘தேசாபிமானி’யும் ஒருசில சிறு பத்திரிகைகளும், ‘கைரளி’ என்கிற தொலைக்காட்சியையும் தவிர அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகங்கள் அரசுக்கும் கம்யூனிஸ்ட் அமைப்புக்கும் எதிராக நிற்கின்றன. இந்த சூழ்நிலையில் இரண்டாவது முறையாக எல்டிஎப் ஆட்சி  அமைத்தது என்றால், தேசாபிமானி மக்களுக்கு ஏற்படுத்திய நம்பிக்கையாகும். அதை முன்னிறுத்தும் அமைப்பின் சக்தியாகும். அத்தகைய நம்பிக்கையை மக்களிடம் பெற்று தீக்கதிர் என்கிற இந்தக் கனல் பெரும் நெருப்பாய் பரவட்டும். இவ்வாறு மனோஜ் பேசினார்.